Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:16 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மழை குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
 தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன்  லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்ற மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் குறிப்பாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments