Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Rain
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:52 IST)
தமிழகத்தில் இன்று முதல்  5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் . வரும் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு பகுதிகளில லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்திலுள்ள மலைப்பகுதிகளில் வரும் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிதமானமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு எதிரொலி: தடை செய்யப்பட்ட பகுதியாக மூவரசம்பட்டு குளம் அறிவிப்பு