தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

Siva
வெள்ளி, 14 நவம்பர் 2025 (18:05 IST)
சென்னை தாம்பரம் அருகே இன்று மதியம் 2.25 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிசி-7 எம்கே II (PC-7 Mk II) ரக பயிற்சி விமானம் வழக்கமான பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.
 
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை உணர்ந்த விமானிகள், உடனடியாக பாராசூட் உதவியுடன் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். விமானம் சேறு நிறைந்த பகுதியில் விழுந்ததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
 
இந்த விபத்து குறித்து இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக ஊடக பக்கத்தில், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று புதுக்கோட்டையில் சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், இன்று தாம்பரம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

நிதிஷ்குமார் தான் முதல்வர்.. ஜேடியு-வின் 'X' தள பதிவு திடீரென நீக்கம்.. யார் முதல்வர்?

ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பீகார் வேட்பாளர்.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments