Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்: பிரதமர் மோடி பெருமிதம்..!

Advertiesment
இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்:  பிரதமர் மோடி பெருமிதம்..!
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:57 IST)
இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
பெங்களூரில் இன்று இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். 
 
இந்த தபால் நிலையத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் உள்ளது என்றும் 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டிடத்தைப் போன்ற இந்த தபால் நிலையத்தின் கட்டிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் பெங்களூரு கேம்ப்ரிட்ஜ் லே அவுட்டில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாக கட்டப்பட்ட தபால் நிலையத்தை பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள் என்றும் நமது தேசத்தின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு ஒரு சான்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது என்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்