Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு.! விழித்துக் கொள்வாரா ஸ்டாலின்.? அண்ணாமலை..!!

Senthil Velan
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (18:50 IST)
திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை   குற்றம் சாட்டி உள்ளார்.
 
மதுரையில் பைக் ஓட்டி ஒருவரை கஞ்சா போதையில் வந்த நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது என்றும் கஞ்சா விற்கும் வியாபாரிகளுக்கு திமுகவில் பதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ: வி.ஆர்.மால் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை.!!
 
கஞ்சா போதையில் மதுரையில் அப்பாவி பைக் ஓட்டி ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்த 4-வது சம்பவம் இது என்றும் முதல்வர் ஸ்டாலின் எப்போது விழித்துக்கொள்வார்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments