Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை: துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு

Advertiesment
income tax raid
, வியாழன், 1 ஜூன் 2023 (15:16 IST)
கரூரில் வருமானவரித்துறையினர் 7வது நாளாக சோதனை செய்து வருவதாகவும் இந்த சோதனையின் போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் மற்றும் மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சோதனையின் முதல் நாளன்று திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதை அடுத்து மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம்: மின்வாரியம் உத்தரவு!