Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் பாதுகாப்பானது என நம்பினோம்! – ஐஐடி பாத்திமா தாயார் உருக்கம்!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (08:57 IST)
சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐஐடி தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார். பேராசிரியரின் தொடர் தொல்லைகளால் மனவிரக்தி அடைந்த பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தனது செல்போனில் தற்கொலைக்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார் பாத்திமா.

பாத்திமாவின் தற்கொலை குறித்து அவரது தாயார் பேசியபோது “வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்து வருவதால் எங்களது பெண்ணை அங்கே படிக்க அனுப்ப பயமாக இருந்தது. அவளுக்கு பனாரஸில் சீட கிடைத்தபோதுகூட வேண்டாம் என மறுத்து விட்டோம். ஆனால் தமிழகம் அப்படி இல்லை என்று நினைத்தோம். எனது மகள் சென்னையில் பாதுகாப்பாக படிக்க முடியும் என்று நம்பினோம்” என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

பாத்திமா தற்கொலை வழக்கில் 11 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments