நடிகர் விஜய் இன்னும் நேரடியாக களத்திற்கு வராத நிலையிலேயே, திமுக அச்சமடைவதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஒருவேளை விஜய் களத்தில் இறங்கிவிட்டால், திமுக இன்னும் அதிகமாக அச்சமடையும் என்றும், ஒரு தொகுதிக்கு ₹50 கோடி முதல் ₹100 கோடி வரை செலவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாகவும் மணி அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"விஜய்க்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். குறைந்தபட்சம் 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் அவர் பெற்றால், திமுகவுக்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்படும்," என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வந்துவிட்டால், அது நிச்சயமாக ஒரு 'கேம் சேஞ்சராக' இருக்கும் என்றும், ஆட்சி மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எந்த சமரசத்தையும் செய்யத் தயார் என்று விஜய் கூறியது, அவர் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவார் என்றுதான் தான் கருதுவதாக பத்திரிகையாளர் மணி கூறினார்.
மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இதுவரை கண்டிராத மிகவும் சவாலான ஒரு தேர்தலாக இருக்கும் என்றும் பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்தார்.