Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அவரைப் போல்’ மாநிலத்திற்கு ஒரு தலைவர் இருந்தால்...நாடு முன்னேறும் - சீமான்

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (15:49 IST)
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி  போல் மாநிலத்திற்கு ஒரு தலைவர் இருந்திருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாஜக தலைமையில் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில், இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு  இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இன்று, திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :
’மமதா பானர்ஜி போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைவர் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான்  பிரித்ததற்குக் காரணம் மதம் தான்’ என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments