Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தொண்டர்களுக்குத் தோள் கொடுப்பேன்' : உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (14:42 IST)
கடந்த சில நாட்களூக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி அதிமுக  நிகழச்சியில் பேசும் போது திமுக 'கட்சியல்ல அது ஒரு கம்பெனி’ என்று காரசாரமாக விமர்சித்திருந்தார்.
முதல்வர் இப்படி விமர்சித்த மறுநாளே, திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமுக வலைதளத்தில் சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பு இல்லாத அடிமைகளுக்கும் எங்கள் கட்சியை விமர்க்க துளிகூட தகுதியில்லை என்று வார்த்தைகளால் பதிலடி கொடுத்திருந்தார்.
 
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாட்சி அருகேவுள்ள பணப்பட்டி கிராமத்தில் அதிமுக எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
 
என்னை திமுகவின் அரசியல் வாரிசு என்று கூறுகின்றனர். ஆனால் நான் கட்சியில் எந்த உயர்ந்த பதவிக்கும் போக மாட்டேன். கடைசிவரைக்கும் கட்சியில் தொண்டனாகவே இருந்து தொண்டர்களுக்குத் தோள் கொடுப்பேன். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு நான் வரிசையில் நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆமாம் நான்  வரிசையில்தான் நிற்கிறேன். ஆனால் இது பதவிக்கான வரிசை இல்லை. தொண்டர்களின் வரிசை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments