Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

Advertiesment
Durai Vaiko

Prasanth K

, சனி, 21 ஜூன் 2025 (14:06 IST)

திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக எதிர்கட்சிகள் கூறி வரும் நிலையில் அதுகுறித்து மதிமுக எம்.பி துரை வைகோ பேசியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கூட்டணி கட்சியினர் கூடுதல் தொகுதிகள் கேட்பதாகவும், வேறு சில கூட்டணியில் இணையும் சாத்தியம் குறித்தும் பேசி வருவதாக அரசல் புரசலாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மதிமுக எம்.பி துரை வைகோ “வரும் சட்டன்மன்ற தேர்தலில் 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் மதிமுக உள்ளது. கூடுதல் தொகுதிகள் தேவையென்ற ஆசை இருந்தாலும் தலைமை ஆலோசித்து என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்போம்.

 

வியாபார அரசியலில் ஈடுபடும் கட்சி மதிமுக இல்லை. சுயமரியாதை எங்களுக்கும் உண்டு. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!