Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்- திருமாவளவன் டுவீட்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:54 IST)
நீட்விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இந்நாளில் புதிய வரலாறு படைத்துள்ள மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினை நெஞ்சாரப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன்.

நீட் தேர்வு ரத்து குறித்த மசோதாவை ஆளு நர் ரவி அவர்கள்  சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் ஆளு நரைத் திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கரி 8 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு  அவர்கள் கூட்டியுள்ளதாக  செயலாளர் கடந்த வாரம்  ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி இன்று காலை சட்டமன்றத்தில் நீட்  விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு வி.சி.க., தலைவர் தொல். திருமாவளன் தனது டிவிட்டர் பக்கத்தில்,இந்தியாவுக்கே முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு நீட்விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இந்நாளில் புதிய வரலாறு படைத்துள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalinஅவர்களின் துணிவையும் செயல்திறனையும் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். இது மொழிவழி தேசியத்துக்கான  சமூகநீதிப் போராட்டமே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments