Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் நேரில் வந்து கேட்டு கொண்டாலும் ஆலோசனை கூற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

விஜய் நேரில் வந்து கேட்டு கொண்டாலும் ஆலோசனை கூற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

Mahendran

, வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:58 IST)
விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் வந்துவிட்டால் பிரசாந்த் கிஷோர் உட்பட அரசியல் ஆலோசகர்களுக்கு கிராக்கி வந்துவிடும் என்றும் பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன் என்றும் அவரே என்னிடம் நேரில் வந்து விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவர் என்னை மதித்து நேரில் வந்தால் சில அறிவுரைகள் மட்டும் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்து வெறி! வயதான தந்தையை நாய் சங்கிலியில் கட்டுப்போட்டு கொடுமை செய்த மகள்!