Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்'.! ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன்! அண்ணாமலை..!!

Senthil Velan
வியாழன், 11 ஜூலை 2024 (13:14 IST)
தமிழ்நாட்டில் உள்ள பேய்களில் ஒவ்வொரு பேயாக விரட்ட வந்த வேதாளம் தான் நான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்ன செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன என்று தெரிவித்தார். அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன் என்றும் ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது என தெரிவித்த அவர், செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என நான் கூறியது உண்மை தான் என்று குறிப்பிட்டார். அவர் மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

ALSO READ: ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய காவல் ஆணையர் அருண்.!
 
செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மை என காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் தன்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும்,  புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர், அதனால் மகிழ்ச்சிதான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!

வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! கைதி சித்ரவதை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.!!

தமிழகம், புதுவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சமோசாவில் தவளையின் கால்.! மிரண்டு போன வாடிக்கையாளர்..!!

வயநாடு நிலச்சரிவில் மிஞ்சிய ஒரே ஒரு உறவும் சாலை விபத்தில் மரணம்.. அனாதையான இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments