Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன்: கமல்ஹாசன்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (21:32 IST)
தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்பட ஒருசில பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மம்தா பானர்ஜி உள்ளிட்ட வேற்று மாநில தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியபோது, 'நான் முறையாக வரி செலுத்துவதால் வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் முறையாக வரி கட்டுகிறேன், நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்து புரட்சியை ஏற்படுத்தி மக்களும் புரட்சி திலகம் ஆகலாம் என்று கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்
 
மேலும் அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கமல்ஹாசன் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments