Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பிரதமர் ஆகாவிட்டால் இந்தியாவுக்கே ஆபத்து: பிரபல நடிகை

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (21:02 IST)
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நாட்டுக்கே ஆபத்து என எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து என்று பிரபல நடிகை ஹேமாமாலினி கூறியுள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியிருக்கும் நடிகை ஹேமமாலினி தற்போது தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த நிலையில் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹேமாமாலினி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அவரை தவிர வேறு யார் வெற்றி பெற்று பிரதமர் ஆனாலும் அது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும் என்றார். மேலும் நாட்டில் ஊழலே இல்லை என்பதை பிரதமர் மோடி உறுதிபடுத்தி இருக்கிறார் என்றும் ஹேமாமாலினி கூறியுள்ளார்.
 
ஹேமாமலினியின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும் கலாய்க்கப்பட்டும் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments