Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' - கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:56 IST)
''கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நாளை கோவையில் இந்த கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்  இன்று  கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இன்று கோவையில் கமல்ஹாசன் கூறியதாவது: '' கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது என்றால் மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா'' என்று கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில்,  கோவையில் போட்டியிட்டு, கமல்ஹாசன் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments