Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரதட்சணைக் கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கணவன்!

வரதட்சணைக் கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கணவன்!
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (18:38 IST)
தன் மனைவி கொடுப்பதாக சொன்ன 10 லட்ச ரூபாய் வரதட்சனை பணைத்தைக் கொடுக்காததால் அவரது அந்தரங்க புகைப்படத்தைக் கணவரே இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அயனாவரத்தைச் சேர்ந்த அந்த பெண் ஏற்கனவே ஒரு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பின்னர் விஜயபாரதி என்பவரோடு அந்த பெண் நெருக்கமாக பழகியுள்ளார். 5 ஆண்டுகள் காதலர்களாக இருந்த அவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்தின் போது விஜயபாரதி மனைவி குடும்பத்திடம் 10 லட்சம் கேட்டுள்ளார்.

ஆனால் அதை அவர்கள் கொடுக்காததால் விஜயபாரதிக்கும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அவரது மனைவி கணவன் வீட்டை விட்டு தன் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதும் விஜயபாரதி வரதட்சணைக் கேட்க அவர் போலிஸில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக விசாரிக்க போலிஸார் அழைக்க விஜயபாரதி தான் விழுப்புரத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்.

இதனிடையே மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார், இதைபார்த்த அவரது மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது சம்மந்தமாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா? அதிமுகவின் பதில்