Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியேட்டரில் நண்பரை பார்த்து சிரித்த மனைவி: சுத்தியால் அடித்து கொலை செய்த கணவர்!

murder
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:40 IST)
தியேட்டரில் நண்பரை பார்த்து சிரித்த மனைவியை வீட்டிற்கு வந்ததும் சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு கனி அம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று அருகிலுள்ள தியேட்டருக்கு தனது மனைவியுடன் சினிமாவுக்கு சென்றுள்ளார்.
 
அப்போது தியேட்டரில் தனது நண்பர் ஒருவர் பார்த்து மாரியம்மாள் சிரித்து உள்ளார். இதனை கணவர் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டிற்கு வந்தவுடன் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் சண்டை வந்து உள்ள நிலையில், தனது மனைவிக்கு அந்த நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த மாரியப்பன் சுத்தியலை எடுத்து மாரியம்மாள் தலையில் அடித்து கொலை செய்து விட்டார். 
 
இந்த சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் மனைவியை கொலை செய்த மாரியம்மனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!