Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை சந்திக்க அவ்வை ஷண்முகியாக மாறிய கணவர்

Advertiesment
மனைவியை சந்திக்க அவ்வை ஷண்முகியாக மாறிய கணவர்
, திங்கள், 11 ஜூலை 2016 (16:08 IST)
திண்டிவனம் அருகே கணவர் ஒருவர் அவ்வை ஷண்முகி ஸ்டைலில் தனது மனைவியை சந்திக்க சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு சென்றுள்ளார்.


 

 
ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சேகர்(27) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் வேலை பிடிக்காமல் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். 
 
இதனால் அவரின் மாமியார், மனைவியை வீட்டு அழைத்து சென்றுவிட்டார். மனைவியை பார்க்க தவித்த சேகர், அவ்வை ஷண்முகி ஸ்டைலில் களத்தில் இறங்கியுள்ளார். 
 
சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு திண்டிவனத்திற்கு மனைவியை பார்க்க சென்றுள்ளார். அவர் அணிந்திருந்த ஆண் செருப்பை பார்த்து சந்தேகப்பட்ட பொது மக்கள் அவரை குழந்தை திருடன் என நினைத்து அடித்து, உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
விசாரணைக்கு பின் அவர் தனது மனைவியை பார்க்க வந்த செய்தி தெரியவந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பமாக இருந்த யானையுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டதால் பெண் யானை பரிதாப சாவு