Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டும் விடாத மனித உரிமை ஆணையம் – கலெக்டருக்கு நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (14:34 IST)
காவலரை திட்டியதற்காக மன்னிப்பு கேட்ட பிறகும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவரை பொதுவில் வைத்து ஒருமையில் திட்டினார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. பலர் இதற்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆட்சியர் பொன்னையா “உணர்ச்சிவசத்தில் பேசியதை பெரிதுப்படுத்த வேண்டாம்” என கூறி மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் காவலரை அவதூறாக பேசியது குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் ஆட்சியர் பொன்னையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments