Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (09:36 IST)
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவரான தீக்காயப் பிரிவு நிபுணர் டாக்டர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
மேலும், உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக, அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்காக கண்காணிப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 
அரசு மருத்துவமனையை நம்பி வந்த பொதுமக்கள், இப்படி நேர்மையற்ற நடத்தையால் பாதிக்கப்படுவதால், மருத்துவ துறையில் நம்பிக்கைக்கு பெரிய தாக்கம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் பொறுப்பை நினைவூட்டும் வகையில் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

மோசமான சாலை.. ரூ.50 லட்சம் நிவாரணம் வேண்டும்: மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்..

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments