Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (09:36 IST)
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவரான தீக்காயப் பிரிவு நிபுணர் டாக்டர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
மேலும், உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக, அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்காக கண்காணிப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 
அரசு மருத்துவமனையை நம்பி வந்த பொதுமக்கள், இப்படி நேர்மையற்ற நடத்தையால் பாதிக்கப்படுவதால், மருத்துவ துறையில் நம்பிக்கைக்கு பெரிய தாக்கம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் பொறுப்பை நினைவூட்டும் வகையில் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments