Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு தலையை வீசியதாக குற்றச்சாட்டு! – இஸ்லாமியர்களை துன்புறுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:28 IST)
மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசு தலையை வீசியதாக இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை சிலர் வீசி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அவர்களை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்ட நிலையில் போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கவும், 6 காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments