Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி –வித்தியாசமாக மார்க்கெட்டிங் செய்த ஹோட்டல் அதிபர் !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (19:06 IST)
வேலூரில் உணவகம் திறந்த முதல்நாளன்று 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக அறிவித்ததால் கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூரில், ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற புதிய உணவகம் இன்று துவங்கப்பட்டது. பிரியாணிக்கு பெயர் போன வேலூரில் தனது ஹோட்டலை எப்படி பிரபலப்படுத்துவது என எண்ணிய அந்த உணவகத்தின் உரிமையாளர் முதல்நாளான இன்று 25 பைசா நாணயம் கொண்டு வருபவருக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர்.

25 பைசா நாணயங்கள் செல்லாது என அறிவிக்கபப்ட்ட நிலையில் மக்கள் தேடிப் பிடித்து அந்த நாணயங்களைக் கொண்டு வந்தனர். கிட்டதட்ட 300க்கும் மேற்பட்டோர் ஹோட்டலுக்கு வெளியே கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100 பேர்களுக்கு மட்டுமே பிரியாணி தயார் செய்யப்பட்டதால் மிச்சப்பேர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments