Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் - மும்பை மாநகராட்சி

ஜனவரி 31 ஆம் தேதி  வரை பள்ளிகள்  மூடல் - மும்பை மாநகராட்சி
, திங்கள், 3 ஜனவரி 2022 (17:42 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.   

இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் மும்பையில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை  மா  நகராட்சி அறிவித்துள்ளது.

அதில், மும்பையில் ஜனவரி 31 ஆம் தேதி  வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கோவா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூட அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசுக் கப்பலில் பயணித்த 66 பேருக்கு கொரொனா!!