Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (17:41 IST)
கனமழை மற்றும் புயல் வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சற்றுமுன் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும், மழை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் வீடுகளை இழந்து உள்ளதாகவும், வீடுகளில் உள்ள பொருள்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும்  என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments