Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்! – ஹவுஸ் ஓனர் வீட்டை எரித்த ஆசாமி!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (12:09 IST)
தூத்துக்குடியில் வீட்டை காலி செய்ய சொன்ன ஹவுஸ் ஓனர் மீது ஆத்திரத்தில் அவரது வீட்டை ஆசாமி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு கார்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பல வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு அருகேயே நடராஜன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். நடராஜனின் வீட்டில் மரிய அந்தோணி என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அந்தோணி அடிக்கடி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதால் அவரை வீட்டை காலி பண்ணி அனுப்பியுள்ளார் நடராஜன்.

இதனால் நடராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த மரிய அந்தோணி இரவு மது அருந்தி விட்டு வந்து நடராஜன் வீட்டிற்கு முன்னாள் நின்றிருந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த 9 பைக்குகள் எரிந்து சாம்பலான நிலையில் நடராஜன் வீட்டிற்குள்ளும் தீ பற்றியதால் உள்ளே உறங்கி கொண்டிருந்த அவர் மகன் அண்ணாமலை தீ பற்றி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். நடராஜன் தீ காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மரிய அந்தோணியை தேடி வருகின்றனர். மொட்டை மாடியில் படுத்துறங்கியதால் நடராஜனின் மனைவி மற்றொரு மகன் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments