கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலையை அடுத்து கோவையில் இந்து முன்னணி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணியின் கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளரான சசிக்குமார், நேற்ற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் இந்து முன்னணி இயக்க அமைப்பினர் கலவரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நிறுத்தி வைத்திருந்த காவல்துறை வாகனத்திற்கு தீயிட்டு எரித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கும் கலவரகாரர்களுக்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் கற்களை கொண்டு வீசியதில் காவல்துறையினர் சிலர் காயமடைந்தனர்.
மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.