Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவனை கடித்து கொன்ற மனைவி: தாய் வீட்டிற்கு செல்ல மறுத்ததால் ஆத்திரம்!

கணவனை கடித்து கொன்ற மனைவி: தாய் வீட்டிற்கு செல்ல மறுத்ததால் ஆத்திரம்!

கணவனை கடித்து கொன்ற மனைவி: தாய் வீட்டிற்கு செல்ல மறுத்ததால் ஆத்திரம்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (18:22 IST)
கான்பூரில் பெண் ஒருவர் தன்னை தாய் வீட்டிற்கு செல்ல மறுத்து கணவனை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பகாதிபூர் கிராமத்தில் அரவிந்த் தனது மனைவி கோமதி தேவி மற்றும் தாய்யுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஃபதேபூரில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க கோமதி தேவி தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துள்ளார்.
 
கோமதி அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு அரவிந்த் மறுத்ததால் ஆத்திரமடைந்த கோமதி கணவனுடன் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையின் போது கோமதி தனது கணவர் அரவிந்தனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கடுமையாக கடித்துள்ளார்.
 
வலியால் துடித்த அரவிந்தனின் சத்தம் கேட்டு வந்த அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்தன் உயிரிழந்துள்ளார்.
 
இது தொடர்பாக அரவிந்தனின் தாய் தனது மருமகள் மீது காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததின் மூலம் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள கோமதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா நலம் பெற கருணாநிதி வாழ்த்து: அரசியல் ஆச்சரியம்!