Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் மசோதா நிராகரிப்பு தகவலை தமிழக அரசு வெளியிடாதது ஏன்?? உயர்நீதிமன்றம் கேள்வி

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:03 IST)
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தகவலை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக வெளியிடாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழக அரசுக்கு,3 நாட்களில் நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பு செய்து திருப்பி அனுப்பியதாகவும்,  இந்த தகவலை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக எந்த பொதுத்தளத்திலும் ஏன் வெளியிடவில்லை எனவும் உயர்நீதிமன்றனம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் விலக்கு மசோதாவை பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையிலும் தமிழக அரசு மௌனம் காத்தது ஏன்? எனவும், புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ஆறு மாதத்திற்குள் தமிழக அரசு மசோதாவை அனுப்பினால், குடியரசுத் தலைவர் பரீசிலிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடுத்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வழக்கை ஆகஸ்டு 13 ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது குறித்த ஆவணங்களை ஆகஸ்டு 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments