Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை?

Advertiesment
அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை:  எந்தெந்த மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை?
, சனி, 11 நவம்பர் 2023 (09:20 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில்  அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று 3 மணி நேரத்தில் திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடலில் நவம்பர் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் எனவே நவம்பர் 14 முதல் கடலோர பகுதியில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல இருக்கும் நிலையில் மழை குறித்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!