Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:27 IST)
இரண்டு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

26/11 மும்பை தாக்குதலின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்!