Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Advertiesment
கனமழை

Mahendran

, புதன், 16 ஜூலை 2025 (15:30 IST)
தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளா உட்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், நாளை  11 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அதேபோல், ஜூலை 18ஆம் தேதியும் கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!