Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை

Advertiesment
Sathuragiri Hills
, புதன், 22 நவம்பர் 2023 (19:24 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சதுரகிரி பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24 ஆம் தேதி முதல்  28 ஆம் தேதி வரை 5 நாட்கள்  பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த  நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கனமழை காரணமாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் பரதோஷம், பவுர்ணமி நாட்களில் சதுரகிரி மலையேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

41 தொழிலாளர்களும் இன்றிரவுக்குள் மீட்கப்படுவர் என தகவல்... முதல்வர் நேரில் ஆய்வு