Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

41 தொழிலாளர்களும் இன்றிரவுக்குள் மீட்கப்படுவர் என தகவல்... முதல்வர் நேரில் ஆய்வு

Mining-tunnel
, புதன், 22 நவம்பர் 2023 (19:15 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.

இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.

அதாவது,  4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுனர்.

இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என  கோரிக்கைகள் எழுந்துள்ள  நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை இன்றிரவுக்கும் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகிறது.

41 பேருக்கும் சிகிச்சை அளிக்க சுரங்க நுழைவுப் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சுரங்கத்தின் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய   ஹெலிகாப்டர்  மூலம் சென்றார் முதல்வர் புஷ்கர் சிங் தமி.

41  தொழிலாளர்களும் பத்திரமாக மீட்க வேண்டுமென மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்