Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

Siva
செவ்வாய், 26 நவம்பர் 2024 (07:12 IST)
நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக இன்று சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
 
கன மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அதேபோல், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சற்று முன் வெளியான செய்தியின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று காலை 5 மணி முதல் சில பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments