Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

Mahendran
திங்கள், 25 நவம்பர் 2024 (17:24 IST)
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடித்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கும் என்பதை உறுதி செய்ய சோதனை மூலம் சரிபார்த்து, அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் 75% பேருக்கு இன்புளூயன்சா என்ற வைரஸ் காரணமாக பரவி வருவதாகவும், இதில் ஏ வைரஸ் மற்றும் பி வைரஸ் என இரு பிரிவுகள் உள்ளதாகவும், இரண்டு வகைக்கும் தனித்தனி சிகிச்சை தேவைப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி வரும் நிலையில், காய்ச்சல் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு பரவாமல் இருக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்காததால் பாதிப்பு தீவிரமாகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments