Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்பாறையில் ஒரே நாளில் இந்தியா அளவில் அதிக மழை பொழிவு!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:27 IST)
தென்மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. 
மழையால் அணைகள் நிரம்பி கேரளா மாநிலமே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை மழைக்கு 167 பேர் பலியாகி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் மட்டும் இந்தியாவிலேயே அதிகப்படியாக 298 மி.மீ மழை பாதிவாகியுள்ளது. 
 
அதற்கு முந்தைய நாள் 190 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments