Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்...

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:04 IST)
நேற்று காலமான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் நேற்று மாலை மரணமடைந்தார். இரவில் டெல்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன், பின்னர் பொதுமக்களும், முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.
 
இவரது இறுதி ஊர்வலம் பாஜக அலுவலகத்தில் இருந்து ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு இன்று மதியம் கிளம்பியது. அங்கு உள்ள ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது.
 
இறுதி சடங்குகளுக்கு பின் 21 குண்டுகள் முழங்க வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. பசுஞ்சான வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு அவரின் உடல் எரியூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments