Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று 3 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

இன்று 3 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!
, வியாழன், 12 அக்டோபர் 2023 (08:03 IST)
இன்றைய தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்று காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிணைக்கைதிகளை சித்ரவதை செய்கிறதா ஹமாஸ்? வீடியோ வெளியானதால் பரபரப்பு..!