Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை - வானிலை மையம் வார்னிங்!

Advertiesment
தமிழகம்
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:23 IST)
தமிழ்நாட்டில் 6 மாவட்டக்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
சென்னையில் நேற்று விடிய விடிய முக்கிய பகுதிகளில் மழை பெய்தது. மேலும்  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மேலும் சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்டக்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூரில் இன்று இடியுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்கள் குஷி!