Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
, சனி, 28 அக்டோபர் 2023 (09:55 IST)
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் தென்கிழக்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்னும் மூணு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின் வருவன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம்

 சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை சில பகுதிகளில் மட்டும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்.. 10 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபம்..!