Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

rain
, திங்கள், 27 ஜூன் 2022 (13:58 IST)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தி.மலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருக்கும்: சசிகலா