Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசாமில் தொடரும் கனமழை; பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு!

Assam
, ஞாயிறு, 26 ஜூன் 2022 (08:07 IST)
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அசாமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து அசாமின் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பாதிப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்!