Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

rain
, திங்கள், 10 அக்டோபர் 2022 (18:22 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை 14 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 12, 13, 14 ஆகிய நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை ருத்தவரை 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்றத்தில் இதைப்பற்றி பேசக்கூடாது: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு!