Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
வங்கக்கடல்

Mahendran

, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:06 IST)
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதை அடுத்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எனவே, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஸா உடனான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: இன்னொரு போரை நிறுத்தினாரா டிரம்ப்?