Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம்

தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம்
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:26 IST)
காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தாலும் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று கரையை கடந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது
 
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தாலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
குறிப்பாக நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு!