Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Rain
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:39 IST)
சென்னை உள்பட 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இதனால் ஏற்பட்ட  வெள்ளத்தில் இருந்து இன்னும் பொதுமக்கள் பலர் மீளவில்லை என்பது தெரிந்ததே.
இந்த நிலையில்  மழை இன்னும் விடாமல் ஒரு சில பகுதிகளில் பெய்து கொண்டிருக்கும் நிலையில் 15 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி உள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மேயர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்: சரி செய்வதாக உறுதி அளித்த மேயர்..