Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (16:41 IST)
இன்று இரவு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது என்பதை பார்த்தோம்.

மேலும், நேற்று இரவு புயல் கரையை கடந்த போதிலும், தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments