Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (16:41 IST)
இன்று இரவு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது என்பதை பார்த்தோம்.

மேலும், நேற்று இரவு புயல் கரையை கடந்த போதிலும், தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments