சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் விரைவில் அதிகரிக்கப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக “இப்போதுதான் கோடை ஆரம்பமா?” என்ற சந்தேகம் பலரது மனங்களில் உருவாகியுள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் கடும் வெப்பம் காணப்படும். ஆனால் இந்த வருடம் மே 15 ஆம் தேதி வரை அதிகமான வெப்பம் தெரியவில்லை. அதிலும், அக்னி நட்சத்திர நாட்களில்கூட மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோடை காலம் மெதுவாக கடந்துவிட்டதாகவே பலர் கருதினர்.
ஆனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. குறிப்பாக சென்னை மாநகரத்தில் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் சூரியன் தனது தீவிரத்தை அதிகரிக்கப்போகிறான் என்றும், வழக்கத்தைவிட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் பதிவாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று சென்னை மாநகரில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டவில்லை என்றாலும், வெப்பச்சுமை பெரிதாக உணரப்பட்டது. இதற்குக் காரணம், காற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததென்றும், அதனால்தான் மக்கள் அதிக சூட்டாக உணர்ந்ததாகவும் வானிலை மையம் கூறுகிறது.
தொடரும் வெப்பத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.